Wednesday, July 3, 2024
Home » 6 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

6 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

by kannappan

சென்னை: தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை அரசு அச்சகத்தின் டிஎஸ்பியாக உள்ள சண்முகம், பதவி உயர்வு பெற்று வேலூர் மாவட்டம் தலைமையிட கூடுதல் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பியாக இருந்த பொன்னுச்சாமி, திருப்பூர் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு கூடுதல் எஸ்பியாகவும், வேலூர் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாக இருந்த பொற்செழியன், சேலம் மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், சேலம் சரக போலீஸ் பயிற்சி பள்ளி டிஎஸ்பியாக இருந்த தங்கவேலு, மயிலாடுதுறை சைபர் கிரைம் கூடுதல் எஸ்பியாகவும், திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாக உள்ள தேவராஜ், விழுப்புரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவுக்கும், சென்னை வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஆனந்தகுமார் பதவி உயர்வு பெற்று, வடசென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

seventeen + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi