6 வயது சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டுசாமி மகன் ஜோதிவேல்(28). இவர் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி, தனது வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை வாயை பொத்தி தூக்கி கொண்டு சென்று அங்குள்ள ஒரு மரத்தடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ஜோதிவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பு கூறினார். ஜோதிவேல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், தமிழக அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் இருந்து ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார். …

Related posts

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது