6ம் வகுப்பு மாணவன் உடல்நலக் குறைவால் சாவு

சேந்தமங்கலம், ஜூன் 11: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூர்நாடு பிளாண்ட்டூர்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரபாபு. இவரது மகன் பிரதி(11), ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 6ம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த பிரதிக்கு, நேற்று முன்தினம் இரவு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர், அவனை வாழவந்திநாடு செம்மேடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரதியின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரதி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த தகவல் அறிந்த வாழவந்திநாடு போலீசார், பிரதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்