பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. மீஞ்சூர் க.சுந்தரத்துக்கு அண்ணா விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது வழங்கப்பட்டது. திமுக முப்பெரும் விழாவில் பெங்களூரு த.ராமசாமிக்கு பேராசிரியர் விருது வழங்கப்பட்டது.