Tuesday, October 8, 2024
Home » 5 பேர் உயிரிழப்பு தலைவர்கள் கண்டனம்

5 பேர் உயிரிழப்பு தலைவர்கள் கண்டனம்

by Karthik Yash

சென்னை: விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் உயிரிழப்பு நடந்ததற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதை காண லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர். அந்த சமயம் வெயிலின் தாக்கம், கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள தற்காலிக மருத்துவ மையங்களில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 90க்கும் அதிகமானோர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், முன்னாள் எம்எல்ஏ சரத்குமார், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

sixteen − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi