டெல்லி: 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ.96,238 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்த ஒன்றிய அரசுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை முடிவடைந்த அலைக்கற்றை ஏல விற்பனை மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.11,340 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. அலைக்கற்றை ஏலம் மூலம் ஒன்றிய அரசு திரட்ட திட்டமிட்டிருந்த தொகையில் ரூ.11,340 கோடி என்பது 12% ஆகும்.