நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலி: 5 பேர் காயம்

திருப்பூர்; திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்தனர். சத்யா காலனியில் கார்த்தி என்பவர் கோயில் விசேஷங்களுக்கு நாட்டு வெடிகள் தயாரித்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கார்த்தி வீட்டில் திடீரென அதிக சப்தத்துடன் வெடிசத்தம் கேட்டுள்ளது; வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வெடிவிபத்தில் கார்த்தியின் வீடு சேதம், எதிரில் இருந்த 5-க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன.

Related posts

ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் பேட்டி

ஹாங்காங் சிக்ஸர் லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் விளையாடவுள்ளதாக அறிவிப்பு

20 ஆண்டுக்குப் பின் ரூ.50 கோடி சொத்துகளை மீட்ட நகைச்சுவை நடிகர் கவுண்டமணி