59 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

 

விருதுநகர், ஜூன் 22: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 25 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, 14 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை, 9 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அடையாள அட்டை, 4 பேருக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை, 7 பேருக்கு ஆதார் அட்டை என 59 திருநங்கையருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சமூக நலத்துறை அலுவலர் ஷீலாசுந்தரி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை