540 மூட்டை மஞ்சள் 50 லட்சத்திற்கு விற்பனை

 

நாமகிரிப்பேட்டை, மே 29: நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருவது வழக்கம். அதன் படி, நேற்று நடைபெற்ற மஞ்சள் ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்கவும், அதேபோல ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர்.

இதில் விராலி 350 மூட்டையும், உருண்டை 150, பணங்காளி 40 மூட்டை என மொத்தம் 540 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. விராலி ரகம் அதிகப்பட்சம் குவிண்டால் ₹19,419க்கும், குறைந்தபட்சம் 9,399க்கும், உருண்டை ரகம் குவிண்டால் அதிகப்பட்சம் ₹16,092கும், குறைந்தபட்சம் ₹9,419க்கும், பணங்காளி ரகம் குவிண்டால் அதிகபட்சம் ₹23,299க்கும், குறைந்த பட்சம் ₹6,689 வரை என மொத்தம் 540 மூட்டை மஞ்சள் ₹50 லட்சத்திற்கு விற்பனையானது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு