50 இளம்பெண்களை மயக்கி உல்லாசம் டான்ஸ் மாஸ்டரின் மன்மத லீலைகள்: வைரலாகும் வீடியோ பரபரப்பு தகவல்கள்

திருச்சி: கும்பகோணத்தில் நடனம் கற்றுக் கொள்ள வந்த 50 இளம்பெண்களை மயக்கி டான்ஸ் மாஸ்டர் உல்லாசமாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் ராஜா (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டான்ஸ் மாஸ்டரான ராஜா, கும்பகோணத்தில் கடந்தாண்டு முதல் டான்ஸ் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இங்கு சிறுவர், சிறுமிகள், வாலிபர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் நடனம் கற்று தந்து வருகிறார். இந்த டான்ஸ் ஸ்டூடியோவில் நடனம் கற்றுக் கொள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து செல்கின்றனர். இதில் ஒரு பெண்ணிடம் முதலில் நட்பாக பழகி மயக்கிய ராஜா, அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் ஸ்டுடியோவில் இருந்த அந்த பெண்ணை தனியாக அழைத்து மீண்டும் உல்லாசத்துக்கு அவர் அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். அதற்கு ராஜா, ‘நீ உல்லாசத்துக்கு வரவில்லை என்றால் நாம் ஒன்றாக இருந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றி விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். இதனால் செய்தவறியாமல் அந்த பெண் தவித்து கொண்டிருந்தபோது, ஸ்டூடியோவில் தனது செல்போனை வைத்து விட்டு ராஜா வெளியே சென்றார். ராஜாவுடன் அந்த பெண் நெருங்கி பழகி உள்ளதால், அவரது செல்போனின் பாஸ்வோர்டு அந்த பெண்ணுக்கு தெரியும்.

இதனால் அந்த பெண் ராஜாவின் செல்போனை எடுத்து பார்த்தபோது பல பெண்களுடன் ராஜா உல்லாசமாக இருந்த வீடியோக்கள் இருந்தது. அதில் தன்னுடன் ராஜா உல்லாசமாக இருந்த வீடியோவும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அந்த வீடியோவை ராஜாவின் செல்போனில் இருந்து டெலிட் செய்தார். பின்னர் ராஜாவின் முகம் நன்கு தெரியுமாறு 42 வயது பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை மட்டும் தனது செல்போனுக்கு அந்த பெண் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்.

பின்னர் டான்ஸ் கற்றுக் கொள்ள வந்த வாலிபர்களிடம், பெண்களை ஏமாற்றி மிரட்டி ராஜா உல்லாசமாக இருந்து வருகிறார். இதற்கு வீடியோ சாட்சி இருந்தும் யாரிடம் சொல்வது என்று தெரியவில்லையென அந்த பெண் கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த வீடியோவை வாங்கிய வாலிபர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் 42 வயது பெண்ணும், ராஜாவும் உல்லாசமாக இருப்பதும், இதை அந்த பெண்ணே வீடியோ எடுத்திருப்பதும் தெரிகிறது. பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை அந்த பெண்ணின் செல்போனில் இருந்து தனது செல்போனுக்கு, ராஜா அனுப்பிக் கொண்டதும் தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு: தனது ஸ்டூடியோவுக்கு டான்ஸ் கற்று கொள்ள வரும் பெண்களிடம் முதலில் நட்பாக ராஜா பழகுவாராம். தன்னுடன் நன்றாக பழகும் பெண்களுக்கு டான்ஸ் கற்று கொடுக்கும்போது அவர்களது உணர்ச்சிகளை தூண்டும் வகையிலான செயல்களில் ஈடுபடுவாராம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத பெண்களை மயக்கி லாட்ஜ், தனது வீடு உள்ளிட்ட பல இடங்களுக்கு கூட்டிச்சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதை அந்த பெண்களுக்கு தெரியாமல் வீடியோவாகவும் எடுத்து தனது செல்போனில் வைத்து கொள்வாராம். அதன்படி டான்ஸ் ஸ்டூடியோவுக்கு வந்த 50க்கும் மேற்பட்ட பெண்களை தனது வலையில் சிக்க வைத்து ராஜா உல்லாசமாக இருந்துள்ளார்.

இதை வெளியில் சொன்னால் தனது பெயரும், குடும்பத்தினர் பெயரும் கெட்டு விடும் என்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்காமல் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி, விடுமுறைக்காக கும்பகோணத்துக்கு வந்துள்ளார். அப்போது சம்மர் கிளாஸாக நடந்த டான்ஸ் பயிற்சிக்கு சென்ற மாணவியிடம் சில்மிஷத்தில் ராஜா ஈடுபட்டார். இதனால் யாரிடமும் சொல்லாமல் டான்ஸ் பயிற்சியை நிறுத்தி விட்டு பாதியிலேயே மாணவி சென்று விட்டாராம். ராஜாவின் லீலை பற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருவதால் 50 பெண்களும் அச்சத்தில் உள்ளனர். தங்களுடைய வீடியோவும் வெளியானால் என்ன செய்வது என்று அச்சத்திலேயே பெண்கள் இருந்து வருகின்றனராம்.

* சமாதானம் பேசும் மனைவி
பெண்களை ஏமாற்றி ராஜா உல்லாசமாக இருப்பது அவரது மனைவிக்கும் தெரியுமாம். இருந்தாலும் அதை அவர், பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. தற்போது இந்த வீடியோ வெளியே வந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ராஜாவின் மனைவி சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். நீங்கள் பாதிக்கப்பட்டதை வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம். வீடியோக்களை வெளியே விட வேண்டாம். இனிமேல் உங்களுக்கு தொந்தரவு இருக்காது. நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம் என்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் ராஜாவின் மனைவி பேசி வருகிறாராம்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு