கோவை: யுடிஎஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக ஒரேநாளில் 500-க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவை பீளமேட்டில் 2017 முதல் யுனிவர்சல் டிரேடிங் சொலியூசன் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்துள்ளது. 76,598 பேர் முதலீடு செய்த ரூ.1,300 கோடியை மோசடி செய்ததாக நிறுவனத்தின் உரிமையாளர், மேலாளர் மீது புகார் எழுந்துள்ளது.