திருவண்ணாமலை; திருவண்ணாமலை அடுத்த மேல்படூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (34), விவசாயி. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளார். அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிரை, எலிகள் மற்றும் மயில்கள் நாசப்படுத்துவதால், எலிகளை கொல்லும் விஷத்தை நெல்லில் கலந்து வயல் வரப்புகளில் நேற்றுமுன்தினம் தூவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பார்த்தபோது அங்கு 5 பெண் மயில்கள் இறந்து கிடந்தன. இதுதொடர்பாக திருவண்ணாமலை வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் சீனுவாசன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று இறந்து கிடந்த மயில்களை மீட்டனர். மேலும், விவசாயி சீனிவாசனை கைது செய்தனர். அவரை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….
5 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
previous post