Sunday, June 30, 2024
Home » 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் அரவிந்த்சாமி படம்

5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் அரவிந்த்சாமி படம்

by kannappan

சென்னை: அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கி இருந்தவர், ஹெச்.வினோத். தற்போது 3வது முறையாக அஜித் குமாரை இயக்கி வருகிறார். அவர் இயக்குனராக அறிமுகமான படம், ‘சதுரங்க வேட்டை’. கடந்த 2014ல் வெளியான இந்தப் படத்தில் நட்டி என்கிற நட்ராஜ், இஷாரா நாயர் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், நடிகர் மனோபாலா தயாரிப்பில் 2016ல் தொடங்கிய படம், ‘சதுரங்க வேட்டை 2’. இதில் அரவிந்த்சாமி, திரிஷா, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, டேனியல் பாலாஜி, நாசர், ராதாரவி, வம்சி கிருஷ்ணா நடித்துள்ளனர். என்.வி.நிர்மல் குமார் இயக்கியுள்ளார். இவர், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ படத்தை இயக்கியவர். ஹெச்.வினோத் கதை, வசனம் எழுதியுள்ளார். பல்வேறு காரணங்களால் ரிலீசாகாமல் இருந்த ‘சதுரங்க வேட்டை 2’ படம், வரும் அக்டோபர் 7ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து அரவிந்த்சாமி நடித்த ‘நரகாசூரன்’, ‘கள்ளபார்ட்’, ‘வணங்காமுடி’ போன்ற படங்களும் பல சிக்கல்கள் காரணமாக இன்னும் திரைக்கு வரவில்லை….

You may also like

Leave a Comment

nineteen − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi