5 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

திருவண்ணாமலை, டிச. 24: திருவண்ணாமலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் எஸ்பி குணசேகரன் தலைமையிலான தனிப்படையினர் ரோந்து பணிகள் ஈடுபட்டனர். அப்போது, சமுத்திரம் காலனி நகராட்சி கழிப்பிடம் பின்புறத்தில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் அவர்களை பிடித்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை அஜீஸ் காலனி பழனி மகன் பிரவீன்குமார்(31), கல் நகர் சரவணன் மகன் விக்னேஷ்வரன்(21), கீழ்பென்னாத்தூர் அடுத்த வெள்ளை குலம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சந்துரு (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு