Tuesday, September 17, 2024
Home » 4 ஆண்டுகள் காதலித்து இளம்பெண்ணை ஏமாற்றிய காதலன் மும்பையில் கைது

4 ஆண்டுகள் காதலித்து இளம்பெண்ணை ஏமாற்றிய காதலன் மும்பையில் கைது

by Karthik Yash

தாம்பரம்: மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த 27வயது பெண்ணுடன், பேஸ்புக் மூலம் மதுரையை சேர்ந்த விக்னேஸ்வரன் (30) என்பவருக்கு 2019ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக தொடங்கிய அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறி 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் அடிக்கடி இருவரும் நேரில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த பெண்ணை விக்னேஸ்வரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், பின்னர் அப்பெண் பட்டியலினத்தை சேர்ந்தவர் என கூறி திருமணம் செய்ய மறுத்து மும்பைக்கு தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட அப்பெண், இச்சம்பவம் குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், விக்னேஸ்வரன் அந்த பெண்ணை ஏமாற்றியது உறுதியானதை தொடர்ந்து, மும்பைக்கு சென்ற தனிப்படை போலீசார் விக்னேஸ்வரனை கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

nineteen − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi