மும்பையில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்திற்குப் பிறகு, சிவசேனா தலைவர் (உத்தவ்) உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் தேவையில்லை. பரஸ்பர சம்மதத்துடன் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளோம். கூட்டணி தொடர்பான விவகாரங்கள் குறித்து இந்தக் குழுவின் உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள். அதுகுறித்து அந்தந்த கட்சித் தலைவர்களிடம் தெரிவிப்பார்கள்’ என்று கூறினார். இந்நிலையில் ‘இந்தியா’ கூட்டணியின் நான்காவது ஆலோசனை கூட்டம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூறுகையில், ‘போபாலில் 4வது ஆலோசனைக் கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது.
தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதேநேரம் அக்டோபர் முதல் வாரத்தில் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. மத்திய பிரதேசத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், அம்மாநிலத்தில் எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடத்த சில தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மும்பையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற சில தலைவர்கள், டெல்லியில் 4வது கூட்டம் நடத்தலாம் என்றனர். எனவே அடுத்த சில நாட்களில் போபாலில் 4வது கூட்டம் நடைபெறுவது தொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும். 4வது கூட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, கூட்டணி தலைவர்களின் கூட்டு பேரணி தேதிகள் குறித்து ஆலோசிக்கப்படும்’ என்று கூறினர்.