Thursday, June 27, 2024
Home » உடல்நலம் பாதிப்பு யானைக்கு 4வது நாளாக சிகிச்சை

உடல்நலம் பாதிப்பு யானைக்கு 4வது நாளாக சிகிச்சை

by Francis

கோவை: கோவை மருதமலை வனப்பகுதியில் உடல்நிலை பாதித்த தாய் யானைக்கு வனத்துறையினர் 4வது நாளாக சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் கடந்த 30ம் தேதி வனப்பணியாளர்கள் ரோந்து பணியின் போது 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்றும், 3 மாத குட்டியுடன் இருந்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில், 40 வயது பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழே படுத்து இருந்தது. இதையடுத்து, வனத்துறையின் கால்நடை மருத்துவ குழுவினர் உடல் நலம் பாதித்த பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது தாய் யானையை பிரியாமல் குட்டி யானை அதன் அருகிலேயே இருந்தது.

மேலும், நிற்க முடியாமல் இருந்த யானையை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். தொடர் சிகிச்சையால் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது யானை சுறுசுறுப்பாக காணப்படுகிறது.
தாய் யானையுடன் கடந்த 4 நாட்களாக இருந்து வந்த குட்டி யானை 1ம் தேதி அதிகாலை தாயைவிட்டு பிரிந்து, தனது சகோதர யானையுடன் வனத்திற்குள் சென்றது. குட்டியானை சென்றதால் தாய் யானை தவிப்புக்குள்ளானது. இதனால், வனத்துறையினர் டிரோன் கேமிரா மூலம் குட்டி யானையை தேடி வருகின்றனர். உடல்நலம் பாதித்து இருந்த பெண் யானையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு மசாலா புல், ஆலை இலை, அரச இலை, பழங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

 

You may also like

Leave a Comment

20 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi