சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புயல், மழை பாதிப்பு காரணமாக மின் கட்டணம் செலுத்த வரும் 18-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளனர். சிறு குறு தொழில் துறையினர் மின்கட்டணம் செலுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளார். வீடுகளுக்கு வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும் பொருந்தும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.