சீர்காழியில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்

மயிலாடுதுறை: சீர்காழியில் வெறிநாய் ஒன்று 4 பேரை கடித்துக் குதறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பூக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அகோரம் என்பவரை வெறிநாய் கடித்துள்ளது. சீர்காழியில் வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை வெறிநாய் கடித்தது. சீர்காழி பங்களா தோப்பில் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த பிரசன்னாவை வெறிநாய் கடித்தது. சீர்காழி நகராட்சியில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!