சென்னை: கால்நடை உதவி மருத்துவர்கள் 454 பேரின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். பணி நிரந்தரம் செய்யக்கோரி போராடும் உதவி மருத்துவர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.