இது கர்நாடக மாநிலத்திற்கு மிக ெபரிய சவாலாக அமைந்துள்ளது. இதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அநீதியை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடக மாநிலத்தின் நலனை பாதுகாக்க நியாயமான முறையில் நாம் அனைவரும் இணைந்து வலியுறுத்த வேண்டும். தென்மாநிலங்களின் வரிப்பணம் வடக்கு மாநிலங்களுக்கு செல்கிறது. இதனால் ஒருபோதும் நமக்கு எந்த பயனுமில்லை. நமது மாநில மக்களின் வரிப்பணம் மாநிலத்தின் இக்கட்டான சூழ்நிலையில் பயன்படாது. கடினமான உழைப்பால் கர்நாடகம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.