அதில், நிறம் மாறும் ஆப்ரிக்க நாட்டு பச்சோந்திகள் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த ஆண் பயணியை வெளியே விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், சென்னை பெசன்ட்நகரில் உள்ள ஒன்றிய வன உயிரின காப்பகத்தின் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விமான நிலையத்துக்கு வந்து அட்டை பெட்டியில் இருந்த ஆப்ரிக்க பச்சோந்திகளை ஆய்வு செய்தனர். அந்த ஆண் பயணியிடமும் விசாரித்தனர். விசாரணையில், அவை முறையான ஆவணங்கள் இல்லாமல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த ஆப்ரிக்க பச்சோந்திகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், இங்கு வெளிநாட்டு நோய்க்கிருமிகள் பரவி விலங்குகள், பறவைகள் மற்றும் மனித உயிர்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்று வன உயிரின காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தாய்லாந்திலிருந்து சென்னைக்கு எந்த விமானத்தில் ஆப்ரிக்க பச்சோந்திகள் கடத்தி வரப்பட்டதோ, அதே விமானத்தில் அவற்றை திருப்பி அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதுதொடர்பாக அவற்றை கடத்தி வந்த ஆண் பயணியை கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுத்தனர். ஆண் பயணி அட்டை பெட்டிகளில் 402 பச்சோந்திகள் எடுத்து வந்ததில், அவற்றில் 67 மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவற்றை அகற்றிவிட்டு, மீதமுள்ள 335 பச்சோந்திகளை மீண்டும் இன்று அதிகாலை தாய்லாந்துக்கு அதே விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. பிடிபட்ட தமிழக பயணியை கைது செய்து, இந்த பச்சோந்திகளை எதற்காக கடத்தி வந்தார் என பல்வே கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.