திருவள்ளூர்: தமிழ்நாடு ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆவணங்களின்றி கொண்டுவந்த 40 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து தனியார் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள், கொலுசு, விளக்கு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.