Sunday, September 29, 2024
Home » 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம் அமெரிக்காவும் ஆட்டம் காண்கிறது: எரிவாயு, உணவு பொருள் விலை அதிகரிப்பு

40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம் அமெரிக்காவும் ஆட்டம் காண்கிறது: எரிவாயு, உணவு பொருள் விலை அதிகரிப்பு

by kannappan

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை அசைத்து பார்த்துள்ளன. வல்லரசான அமெரிக்காவையும் இது விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவின் பணவீக்க விகிதம், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 8.3 சதவீதமாக இருந்த பணவீக்கமானது மே மாதத்தில் 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 1981ம் ஆண்டுக்கு பின் இது அதிகபட்ச பணவீக்கமாகும். மாதாந்திர அடிப்படையில் மார்ச் முதல் ஏப்ரல் வரையில் 0.3 சதவீதம் உயர்ந்த நிலையில், ஏப்ரலை காட்டிலும் மே மாதத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. விமான டிக்கெட் முதல் ரெஸ்டாரென்ட் உணவு வரை விலை உயர்வை காண முடிகின்றது. பணவீக்கம் உயர்வு குறித்த அறிக்கையானது எரிசக்தி பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை மட்டுமல்லாமல் மற்ற அனைத்திலும் எதிரொலிக்கும் என்பதை குறிப்பதாக உள்ளது. பணவீக்க உயர்வால் பங்கு சந்தைகள் சரிந்தன. வட்டி விகிதங்களை உயர்த்துவதற்காக வங்கியின்  மீதான அழுத்தம் அதிகரிக்கின்றது. இந்த பணவீக்க உயர்வானது நிலைத்திருக்க வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்னர். எரிபொருள் விலையானது மே மாதத்தில் மட்டும் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்து. இதேபோல் மளிகை பொருட்களின் விலையானது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. 1979ம் ஆண்டுக்கு பின் இது அதிகபட்ச உயர்வாகும். ரஷ்யா-உக்ரைன் போருக்கு பின் தானியங்கள் மற்றும் உரங்களுக்கான விலைகள் அதிகரித்துள்ளது. உணவகங்களில் விலைகள் கடந்த ஆண்டை காட்டிலும் 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இது 1981ம் ஆண்டு பின் 12 மாதங்களில் இருந்ததை விட அதிகபட்சமாகும். இது உணவு பொருட்கள் மற்றும் ஊழியர்களுக்கான அதிக செலவுகளை பிரதிபலிக்கின்றது. இந்த பணவீக்க உயர்வானது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாக பாதிப்படைய செய்துள்ளது….

You may also like

Leave a Comment

1 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi