அதிர்ச்சியடைந்த சுரேஷ் ஊட்டி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், டிராக்டரில் உதிரி பாகங்கள் திருடியது ஊட்டி அருகே மேலூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (34), சூர்யா(20), பூர்ண சந்திரன் என்ற சுபாஷ் (21) என்பதும், இதேபோல் இவர்கள் முத்தோரை பகுதியை சேர்ந்த நாகராஜ், செந்தில், மாதேஷ் ஆகியோரின் டிராக்டர்களிலும் உதிரிபாகங்கள் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் திருட்டு பொருட்களை வாங்கியதாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுந்தர் என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில், சுபாஷ் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.