4 போலீசாருக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு

சேந்தமங்கலம், ஜூன் 14: கொல்லிமலை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த 4 போலீசாருக்கு, பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் உள்ள செம்மேடு, செங்கரை ஆகிய போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலர்களாக பணியாற்றி வந்த அண்ணா, ஜெகதீசன், சரவணன், ரவிச்சந்திரன் ஆகிய 4 பேருக்கும், சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணன், ஏடிஎஸ்பி தன்னராசு, டிஎஸ்பி ஆனந்தராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதே போல், நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 35 பேர், பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்