4 வது நாளாக முதலமைச்சர் விளையாட்டு போட்டிகள்

 

திருவாரூர், செப்.14: திருவாரூரில் நேற்று 4வது நாளாக தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதனை கடந்த 10ந் தேதி மாவட்ட விளையாட்டரங்கில் கலெக்டர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபாடி, கூடைப்பந்து, வளைகோல்பந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதேபோன்று நேற்றும் 4வது நாளாக மாணவ, மாணவிகளுக்கு வாலிபால், ஹேண்ட்பால் மற்றும் கோ-கோ ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும் இன்று (14ந் தேதி) மாணவர்களுக்கு கேரம் மற்றும் கிரிக்கெட் போட்டியும், நாளை மாணவிகளுக்கு கேரம், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுகிறது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்