சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 11 பெண் ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாடம்பாக்கம் தேனபுரீஸ்வரர் கோயிலிலும் பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டு அனைத்து பூஜைகளும் கால நேரத்தின்படி நடந்து வருவதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.