இந்த மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் 2 அணிகளுமே ரன் குவிக்க திணறின. ஜிம்பாப்வே 115 ரன்களும், இந்தியா 102 ரன்களும் மட்டுமே எடுத்தன. ஆனால் 2வது போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி 234 ரன்கள் குவித்தது. எனவே, மூன்றாவது போட்டிக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இரண்டு அணிகளும் தொடரில் முன்னிலைபெற போராடும் என்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.