நீட் ரத்து கோரி வரும் 3ம் தேதி திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்

சென்னை: சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய கோரி வரும் 3ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ. அரசை கண்டித்து திமுக மாணவர் அணிச் சார்பில் வரும், 3ம் தேதி காலை 9 மணியளவில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Related posts

டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

கள்ளக்குறிச்சி உயிரிழப்பை வைத்து கபட நாடகமாடுகிறார் எடப்பாடி: கருணாஸ் தாக்கு

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு