அதை பார்த்த மணிகண்டன் அவர்களை காப்பாற்றுவதற்காக குட்டையில் குதித்தார். அப்போது அவரும் உள்ளே சிக்கிக்கொண்டார். இதனிடையே குட்டைக்கு சென்றவர்கள் வீடு திரும்பாததால் அவர்களை தேடி மணிகண்டனின் மனைவி குட்டை பகுதிக்கு வந்து பார்த்தார். அப்போது குட்டையின் கரையில் குழந்தைகளின் செருப்புகள் மட்டுமே கிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அளித்த தகவலையடுத்து தீயணைப்பு துறையினர் வந்து குட்டையில் இறங்கி ஆழமான பகுதியில் தேடினர். அப்போது மணிகண்டன், தமிழ்ச்செல்வி, புவனா ஆகியோரது உயிரற்ற உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.