இந்நிலையில் சிறுமியை தாயின் 2வது கணவர் சுரேந்திரன், மகன் சிவக்குமார் ஆகியோர் சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மாதவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையம் மாற்றப்பட்டு விசாரணை நடத்தியதில், இவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதற்கு உடந்தையாக சிறுமியின் தாயும் இருந்துள்ளார். எனவே இவர்கள் மூன்று பேரையும் கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.