அதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள புதிய சட்டங்கள் மீது உறுதிப்பாடான புரிந்துணர்வு ஏற்பட கால அவகாசம் தேவை என்பது உண்மைதான். புதிய 3 குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட போது திமுக நாடாளுமன்றத்தில் கடுமையாக இதை எதிர்த்தது. உள்துறை மந்திரிக்கு நானே விரிவான கடிதம் எழுதி புதிய குற்றவியல் சட்டம் என செயலாக்கத்தை தள்ளிவைத்து, மாநிலங்களுடன் முறையான ஆலோசனை நடத்திட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளேன். நாடு முழுவதும் சட்டங்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதோடு, மென்பொருளும் அதற்கேற்றவாறு மாற்றம் செய்யப்படுகிறது. அதை மனதில் வைத்து இச்சட்டம் குறித்தும் அது அமலாக்கம் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும் நீதித்துறை மற்றும் காவல்துறையினருக்கு உரிய விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. அவற்றை விரைந்து முடிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.