சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு, சட்டத்துறை தயாரித்துள்ள 3 புதிய சட்டங்கள் குறித்த கையேடை வெளியிட்டு பேசியதாவது: பெரிய வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் 3 புதிய சட்டங்கள் இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை தமிழில் மொழியாக்கம் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இந்த சட்டங்கள் அனைத்தும் குற்றம் செய்பவர்களுக்கும் தெரிய வேண்டும். சட்டங்களை கடுமையாக்கும் போதுதான் குற்றங்கள் குறையும் என்றார்.