ஆப்கானில் குண்டுவெடிப்பு 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்து மினி வேனில் பயணம் செய்த 3 பேர் பலியாயினர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சிறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு மினி வேனில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, குண்டு வெடித்து அந்த வாகனம் சின்னாபின்னமாகியது. இதில்,3 பேர் பலியாயானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடந்ததற்கு பின் ஐஎஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மினி வேனில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்ததாகவும், இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாயினர். மேலும் சிலர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

Related posts

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்!!

என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்

மதுரையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள், மெட்ரோ அதிகாரிகள் நேரில் ஆய்வு