டெல்லி: 3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைந்ததை அடுத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆஜர்படுத்தியது சிபிஐ. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்கிறது.