ஜூலை 1ம் தேதி முதல் அமல் செய்யப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும், இந்திய திருநாட்டினை காவல்துறை ஆதிக்க ஆட்சி நாடாக மாற்றும் வகையிலும் இருப்பதால் இச்சட்டங்களை ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், இதனை எதிர்த்து வரும் 6ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களின் பாதகங்களை வழக்கறிஞர்கள் மட்டும் இன்றி, பொது மக்களும் அறிந்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கண்டன கருத்தரங்கங்கள் நடத்துவது என்றும், இந்த கருத்தரங்கில் கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைத்து வழக்கறிஞர்களும் பங்கு எடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.