அப்போது ஜனநாயக வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் சுரேஷ் கூறியதாவது: ஒன்றிய அரசின் மூன்று சட்ட திருத்தமானது ஜனநாயக படுகொலை ஆகும். தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு அந்தந்த மொழிகளில் பெயர் வையுங்கள், இந்தியில் பெயர் வைக்காதீர்கள், மறைமுகமாக இந்தியை திணிக்கிறார்கள். அரசியலமைப்பை மாற்ற நினைக்கிறார்கள். அதனுடைய ஒரு பகுதி தான் இந்த திட்டம். இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் மூன்று முக்கிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறும் வரை வழக்கறிஞர்களின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், தடுப்பை தாண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றதால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கைது செய்தனர்.