3 குழந்தைகள், கர்ப்பிணி மனைவி இருந்த நிலையில் மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சட்டக்கல்லூரி மாணவன் கைது

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டரமடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(29). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு தனியார் கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மனைவி தற்போது 6 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இதற்கிடையில், விஜயகுமாருக்கும் பள்ளிகொண்டா அருகே உள்ள அரசு கல்லூரியில் பயிலும் மாணவிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு திருமணம் ஆனதை மறைத்து விஜயகுமார் மாணவியுடன் காதல் செய்து வந்துள்ளார். மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி ஒரு நாள் வயிற்று வலி என்று வீட்டில் கூறியுள்ளார்.

அப்போது தான் மாணவி கர்ப்பமாகி இருப்பது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து கர்ப்பத்திற்கு காரணமான விஜயகுமாரை தேடி அவரது ஊருக்கு சென்றுள்ளனர். அப்போது தான் சட்டக்கல்லூரி மாணவனான விஜயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் மற்றும் மனைவி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், அவரது பெற்றோரும் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தனர். அதனடிப்படையில், இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சட்டக்கல்லூரி மாணவனை நேற்று கைது செய்தனர்.

Related posts

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கடந்த 25 வருடங்களாக மூன்று வேளையும் ஆயிலை குடித்து உயிர் வாழும் மெக்கானிக்: ஒசூரில் பரபரப்பு