Friday, September 20, 2024
Home » 3 குழந்தைகளுக்கு விஷ உணவு கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

3 குழந்தைகளுக்கு விஷ உணவு கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

by Karthik Yash

விருதுநகர்: விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மல்லிக்கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன்(40). மனைவி கலையரசி(32). தம்பதிக்கு 12 வயதில் மகன், 11, 9 வயதில் மகள்கள் உள்ளனர். ஜெகதீசன் கரூரில் கட்டிட பணி செய்து வருகிறார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருவரும் நேற்று காலை செல்போனில் பேசியபோது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கலையரசி கடையில் 4 பாக்கெட் எறும்பு பொடியை வாங்கி உணவில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். பின்பு தானும் அதை சாப்பிட்டுள்ளார்.

தனது பிள்ளைகளுடன் பள்ளிக்குச் செல்லும் ஜெகதீசனின் பிள்ளைகள் வராததால் சந்தேகமடைந்த அவரது சகோதரி லட்சுமி வந்து பார்த்தபோது, வீடு உட்புறமாக பூட்டி இருந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது அனைவரும் மயங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து விருதுநகர் ஊரக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

twenty − 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi