பதேர்வா: காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தை காவல்துறை, ராணுவம், சிஆர்பிஎப் வீரர்கள் முற்றுகையிட்டனர். நேற்று கந்தோ பகுதியில் உள்ள பஜாத் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். சினூ பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.