திருமணத்தில் நடனமாடும்போது பிரச்னை: கொடுங்கையூரில் வாலிபரை வெட்டிய 3 பேர் சிக்கினர்


பெரம்பூர்: திருமணத்தில் நடனமாடும்போது ஏற்பட்ட பிரச்னையில் வாலிபரை சரமாரியாக வெட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர் சுகந்தம்பாள் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் விஜய் (20). இவர் நேற்றுமுன்தினம் இரவு நண்பர் மணியுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோயில் முதல் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்குவந்த 5 பேர், விஜய்யை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். விஜய்யை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுசம்பந்தமாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியபோது கடந்த ஜூன் மாதம் கொடுங்கையூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நடனமாடும்போது ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டபோது விஜய்யை 5 பேர் தாக்கியுள்ளனர். இது சம்பந்தமாக ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்துள்ளனர். இதன்பிறகு இந்த முன் விரோதம் காரணமாக மீண்டும் விஜய்யை அதே நபர்கள்தான் வெட்டியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து கொடுங்கையூர் ஆர்.வி.நகர் பகுதியை சேர்ந்த கீதா பிரியன் (22), அவரது அண்ணன் கேசவபிரியன் (24), சோழவரம் பகுதியை சேர்ந்த சிவா என்கின்ற வெங்கடேசன் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மணி என்கின்ற ஓட்டவட மணியை தேடி வருகின்றனர்.

Related posts

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

ஜம்மு அருகே மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: ஓடும் பேருந்தில் இருந்து குதித்ததால் 10 பயணிகள் காயம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை பிரதமருடன் சந்திப்பு..!!