மின்னல் தாக்கி தந்தை மகன் உட்பட 3 பேர் பலி


சரண்: பீகார் மாநிலம் சரண் மாவட்டம் பெல்டி பகுதியில் நேற்று மாலை இடியுடன் கன மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது தந்தையும், மகனும் வயலுக்கு யூரியா தெளிக்கச் சென்றனர். மேலும் 2 வாலிபர்கள் வயலில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மழையில் இருந்து தப்பிப்பதற்காக, அவர்கள் நான்கு பேரும் மரத்தின் கீழ் நின்றிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்’’ என்றனர்.

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!