இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் வேல்முருகன் ஆஜரானார். அப்போது, மின்வாரிய தரப்பு வழக்கறிஞர் அருண்குமாரிடம், மின் பகிர்மான கழகத்தில் காலி பணியிடங்களை எப்போது நிரப்புவீர்கள் என்பது குறித்து மதியம் தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து 2 வாரங்களில் பதில் தரவேண்டும் என்று டான்ஜெட்கோவுக்கு உத்தரவிட்டனர்.