புதுடெல்லி: வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படாததால், மாநிலத்துக்குள் ஏற்பட்ட பிரச்னையாகக் கருதி தமிழ்நாட்டில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 355-ஐ அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் இந்த வழக்கானது அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை நேற்று தள்ளுபடி செய்தனர்.