கடந்த பத்தாண்டுகளில் நல்ல ஆளுமையுடன், ஏழைகளின் நலன் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற பிரதமர் மோடியின் முழுமையான தொலைநோக்குப் பார்வை, உலகின் 11வது பெரிய பொருளாதாரத்திலிருந்து, 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாற உதவியது. வரும் 2027ம் ஆண்டில் 3வது பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியாக இந்தியா உருவெடுக்கும்.
அந்நிய செலாவணி கையிருப்பில், கடந்த 2014ம் ஆண்டு முதல் 4வது மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. வளரும் நாடுகளின் நாணய மதிப்பில் இந்தியா சிறப்பாக செயல்படும் நாடுகளில் ஒன்றாகும்’ என்றார்.