கடலூர்: திட்டக்குடி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. நாவலூர், மருதாத்தூர், ஆதமங்கலம் மேலூர் உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர் சேதமானதாக புகார் அளித்துள்ளனர். முறையாக வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் மூழ்கி நெற்பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.