300 மூட்டை பருத்தி ₹8 லட்சத்திற்கு ஏலம்

அரூர், ஆக.14: அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 105 விவசாயிகள், 300 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து வந்தனர். பிசி ரக பருத்தி குவிண்டால் ₹6,620 முதல் ₹7,519 வரை ஏலம் போனது. இதில் ₹8லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

Related posts

சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க கண்காட்சி

முத்துப்பேட்டை அருகே ராணுவர் காலனி; மயான கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

முத்துப்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்