30 சதவீதத்திற்கு மேல் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகள் கண்காணிப்பு: அதிகாரி தகவல்

சென்னை,: தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. தற்போது ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், மாவட்டம்தோறும் 30 சதவீதத்திற்கும் மேல் விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகள் கூடுதல் நேரம் செயல்படாமல் தடுக்க மாவட்டம்தோறும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.உத்தரவை மீறி கூடுதல் நேரம் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், 30 சதவீதத்திற்கும் மேல் விற்பனை நடைபெறும் கடைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மதுரை, சேலம், திருச்சி மண்டலங்களில் விற்பனை அதிகமாக நடப்பதாக தெரிகிறது. அதிகபட்சம் ரூ.1 லட்சம் விற்பனையாகும் கடையில் ரூ.1.30 லட்சம் வரையில் மட்டுமே விற்பனை நடைபெறலாம். விற்பனை அதிகம் நடைபெற்றால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட கடை பணியாளர்களிடம் விளக்கம் கேட்கப்படும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கூலிங் பீர் விற்பனை அதிகமாக நடக்கிறது. இதனாலேயும் விற்பனை அதிகரிப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர். சரியான காரணங்கள் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இல்லை என்றால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட மேலாளர் தலைமையிலான அதிகாரிகள் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்யும் மதுபானங்களுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். வேட்பாளர்கள் வழங்கும் டோக்கன்களை வைத்து விற்பனை நடைபெறுகிறதா என்பதையும் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு கூறினார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்