30 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: ஒருவர் கைது

திருத்தணி: ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 லட்டர் கள்ளச்சாராயம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு காரணமானவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருத்தணி அடுத்த நெமிலியில் வசிக்கும் சிலர் ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் நெமிலி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்து  கொண்டிருந்த நெமிலி காலனியை சேர்ந்த வெங்கடேசன் (50 ) என்பவரது வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். இதில், பிளாஸ்டிக் பையில் 30 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, வெங்கடேசனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது